Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருமணம் செய்துகொள்ள, ஆசைப்படுவதில் என்ன தவறு..?

January 11, 2018
in News, Politics, World
0

வங்கியை கொள்ளை அடித்தேனா? பாகிஸ்தான் ரகசியத்தை இந்தியாவுக்கு வெளிப்படுத்தினேனா? திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதில் என்ன தவறு? என இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்(64). இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.

அதை தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் 3-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தினத்தன்று புஷ்ரா மனேகா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்ததாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இம்ரான்கானின் 3-வது திருமணத்தை பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் முப்தி சயீத் என்பவர் நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் லாகூரில் ஜனவரி 1-ந்தேதி இரவு நடைபெற்றது.

மணப்பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரது முதல் கணவர் ஒரு அரசு ஊழியர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆன்மிக நிம்மதிக்காக புஷ்ரா மனேகாவை இம்ரான் கான் சந்தித்துள்ளார். கணவரை பிரிந்து வாழும் அவர் மீது இம்ரான் கானுக்கு இருந்த ஈடுபாடு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாகிஸ்தானில் நவாஸ் ஷரிப் கட்சிக்கு ஆதரவான சில ஊடகங்கள் இம்ரான் கானின் மூன்றாம் திருமணம் தொடர்பான யூக செய்திகளை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்த இம்ரான் கான், தற்போது பொங்கி எழுந்து நவாஸ் ஷரிப் மற்றும் அவருக்கு ஆதரவான ஜியோ டி.வி. உள்ளிட்ட ஊடகங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

‘நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் அசிங்கமான அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எனக்கு கடந்த 40 ஆண்டுகாலமாக தெரியும். இருந்தாலும், அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து அந்த விபரங்களை வெளியிட மாட்டேன்.

நான் என்ன வங்கியை கொள்ளை அடித்தேனா? நாட்டுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பணத்தை வெளிநாட்டுக்கு கடத்தி சென்றேனா? கூலிக்கு கொலை செய்யும் கும்பலை ஏவி விட்டேனா? அல்லது, நாட்டின் ரகசியத்தை இந்தியாவுக்கு தெரிவித்தேனா?

இவற்றில் எதையுமே நான் செய்யவில்லை. ஆனால், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய மிகப்பெரிய குற்றத்தை நான் செய்துள்ளதை கடந்த மூன்று நாட்களாக எனக்கு எதிராக நடத்தப்படும் விஷமத்தனமான பிரசாரங்களில் மூலம் அறிந்து கொண்டேன்.

கடந்த சில ஆண்டுகளாக நான் இழந்திருக்கும் நிம்மதி எனக்கு திரும்பி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்குமாறு எனது நலவிரும்பிகள் மற்றும் தொண்டர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்

Next Post

ஆயுதங்களுடன் கொள்ளை!!

Next Post

ஆயுதங்களுடன் கொள்ளை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures