1984ல் கேரளாவில் புகழ்பெற்ற சுகுமார குறூப் என்கிற கிரிமினலின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாகி வருகிறது. இதில் குறூப் கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கிறார். முப்பது வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக சொல்லப்படும் இந்த சுகுமார குறூப் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக இதுபற்றி ஆராய்ச்சி செய்து படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.
தான் இயக்கிய செகண்ட் ஷோ படம் மூலமாக துல்கர் சல்மானை முதன்முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தி, வெற்றி நாயகனாக உருவாக்கியவர் இவர்தான். இந்தப்படத்தில் சுகுமார குறூப்பை தேடி கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் இந்திரஜித் நடிக்கிறார்.. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இவரது கேரக்டர் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் திருடன் போலீஸ் ஆட்டத்திற்கு தயாராகிவிட்ட துல்கர் சல்மானும், இந்திரஜித்தும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை.. தமிழில் இந்திரஜித் நடித்துள்ள நரகாசுரன் படம் ரிலீசுக்காக நீண்டகாலமாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.