திருடனை நிர்வாணப்படுத்தி ஓடவைத்த பெண்: பார்த்து ரசித்த மக்கள்

திருடனை நிர்வாணப்படுத்தி ஓடவைத்த பெண்: பார்த்து ரசித்த மக்கள்

பெண்ணொருவர், தன்னிடம் திருட வந்த ஒருவனை பிடித்து, அவனை நிர்வாணப்படுத்தி, பாதையில் ஓடவைத்த சம்பவமொன்று கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த காட்சியை பெருந்தொகையான மக்கள் பாதையில் நின்று பார்த்துள்ளனர்.

குறித்த பெண் பாதையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் திருட முயன்றுள்ளான். அப்போது திடீரென அந்த பெண் அவனிடமிருந்த கத்தியை தட்டிவிட்டு அந்த இளைஞனின் தலை முடியை பிடித்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அந்த இளைஞன் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளான்.

எனினும், கடும் கோபத்தில் இருந்த அந்த பெண் குறித்த இளைஞனது ஒவ்வொரு ஆடையாக களையச் சொன்னார். பின்னர் தனது மேல் சட்டை முதல் காலுரை வரை அவன் உடைகள் அனைத்தையும் களைத்ததும், அவனை தெருவில் நிர்வாணமாக ஓடும்படி அந்த பெண் விரட்டியுள்ளார்.

அப்பொழுது பயத்துடன் ஓடிய அவனை ஒரு சிறிய நாய் துரத்திக்கொண்டே சென்றது. நடுத்தெருவில் நடந்த இந்த சம்பவத்தை பலர் வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News