Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கான் தனது பத்திரிகையாளர்களில் 60 வீதமானவர்களை இழந்துள்ளது.

August 22, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
தலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கான் தனது பத்திரிகையாளர்களில் 60 வீதமானவர்களை இழந்துள்ளது.

A female presenter for Tolo News, Thamina Usmani, covers her face in a live broadcast at Tolo TV station in Kabul on May 22, 2022. - Women presenters on Afghanistan's leading news channels went on air May 22 with their faces covered, a day after defying a Taliban order to conceal their appearance on television. (Photo by Wakil KOHSAR / AFP)

கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பின்னர் யுத்தத்தினால் அழிவடைந்துள்ள நாடு தனது ஊடக நிறுவனங்களில் 39.59 வீதமானவற்றை இழந்துள்ளது 59.6 வீத பத்திரிகையாளர்களை இழந்துள்ளது என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகபணியாளர்கள் வேலை இழந்ததால் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானி;ன் ஊடக சமூக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என டோலோ நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்;ட் 15 ம் திகதி ஆப்கானில் ஆட்சி பொறுப்பை தலிபான் கைபற்றியது முதல் ஆப்கான் தனது ஊடக நிறுவனங்களில் 39.59 வீதமானவற்றை இழந்துள்ளது 59.6 வீத பத்திரிகையாளர்களை இழந்துள்ளது குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகiயாளர்களில் கால்வாசி பேர் வேலைவாய்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் அந்த 11 மாகாணங்களில் அந்த தொழில்துறையிலிருந்து இல்லாமல் போயுள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மோசமான பொருளாதார நெருக்கடி ஊடகசுதந்திரம் மீதான மோசமான ஒடுக்குமுறையின் மத்தியில் இது இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஆப்கானில் பத்திரிகை துறை அழிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பின் செயலாளர் நாயகம் கிறிஸ்டபர் டெலொரியோ தெரிவித்துள்ளார்.

ஊடக பணியாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை துன்புறுத்தல்களை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் ஊடகபணியாளர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அவர்கள் தங்கள் பணிகளை செய்ய அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் தரவுகளின் படி ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15 ம் திகதிக்கு முன்னதாக 547 ஊடக நிறுவனங்கள் காணப்பட்டன, தற்போது இதில் 219 நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.

ஆப்கானில் பத்திரிகையாளர்களின் நிலையை சுட்டிக்காட்டியுள்ள பத்திரிகையாளர் மீனா ஹபீப் நான் எனது வாழ்க்கையில் 9 வருடங்கள் ஊடகங்களிற்காக பணியாற்றியுள்ளேன்,வேறு வேலையொன்றை பழகுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை என டொலொ நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

ஊடக வன்முறைகள் மற்றும் தகவல்களை பெறுவது போன்ற விடயங்களிற்கு தீர்வை காண்பதற்காகஇஸ்லாமிய எமிரேட் ஊடகங்கள் பத்திரிகையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக குழுவொன்றை அமைக்கவேண்டும் என ஆப்கானிஸ்தானின் சுதந்திர பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஹொஜட்டுல்லா முடாடிடி தெரிவித்துள்ளார்.

அரசியல் மாற்றம் காரணமாக ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளனர் அவர்களில் பலர் எதிர்காலம் குறித்த தெளிவான திட்டமின்றி பாக்கிஸ்தானிலும் ஏனைய உலக நாடுகளிலும் தங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கியநாடுகளின் உதவி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மனித உரிமை மீறல்கள் 173 பத்திரிகையாளர்களையும் 163 ஊடக பணியாளர்களையும் பாதித்துள்ளது-அதிகாரத்தில் உள்ளவர்களே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் மீது அதிகரித்து கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கடும் கண்டணத்தை பெற்றுள்ளன ஐக்கியநாடுகளும் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவும் கைதுகளை கண்டித்துள்ளதுடன் தலிபான் உள்நாட்டு பத்திரிகையாளர்களை துன்புறுத்துவதையும் தடுத்துவைத்தல் மற்றும் அச்சுறுத்தல் மூலம் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டின் ஊடக பரப்பில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன அரைவாசிக்கும் மேற்பட்ட சுதந்திர ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன நூற்றுக்கான பத்திரிகையாளர்கள் வெளியேறியுள்ளனர்,யுஎன்எம்;ஏ தெரிவிக்கின்றது.

தலிபான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் 70 வீதமான ஊடக நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன.

Previous Post

கோட்டாவை தொடர்புகொண்டார் ரணில்

Next Post

திரு­ம­ண­மான, குழந்தை பெற்ற பெண்­க­ளும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்குபற்ற அனு­மதி

Next Post
திரு­ம­ண­மான, குழந்தை பெற்ற பெண்­க­ளும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்குபற்ற அனு­மதி

திரு­ம­ண­மான, குழந்தை பெற்ற பெண்­க­ளும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்குபற்ற அனு­மதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures