லிந்துலை – தலவாக்கலை நகரசபை தலைவர் அசோக்க சேபால கைது செய்யப்பட்டுள்ளார்.
5 வயதான பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நகரசபை தலைவருடன் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.