கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இறைவி படம் வெளியாவதற்கு முன்பே தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் என கார்த்திக் சுப்பராஜ் அறிவித்தது ஞாபகம் இருக்கலாம்.. அதற்குப் பிறகு மெர்க்குரி மற்றும் ரஜினியை வைத்து பேட்ட என இரண்டு படங்களை இயக்கி முடித்து விட்டார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஏற்கனவே அறிவித்தபடி தனுஷ் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள திரையுலகைச் சேர்ந்த ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். கடந்த ஆண்டு மாயநதி, இந்தாண்டு வரதன் என ஹிட் படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்ய லட்சுமி.
தமிழில் ஏற்கனவே சுந்தர்.சி, இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்து வரும் படத்தில் இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.