கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் கேர் ஆப் காஞ்சரபள்ளம். சிறிய பட்ஜெட்டில் தயாராகி நல்ல வசூலை கொடுத்தது. ராதா பெஸ்சி, மோகன் பஹத், பிரவீணா புரூச்சி உள்பட பலர் நடித்திருந்தார்கள். மகா வெங்கடேஷ் இயக்கி இருந்தார். தற்போது இந்தப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
ஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் சார்பில் எம்.ராஜசேகர ரெட்டி, ஜீவன் கோத்தா இணைந்து தயாரிக்கிறார்கள். ஹேமம்பர் ஜஸ்தி இயக்குகிறார். ஸ்வீகர் அகஸ்தி இசை அமைக்கிறார். குணசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. படம் பற்றிய இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தி கூறியதாவது:
கேர் ஆப் காஞ்சரபள்ளம் சில மாறுதல்களுடன் ஒரு யதார்த்தமான காதல் கதையாக உருவாகிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், எதிர்கொள்ளும் மனிதர்களையும், சம்பவங்களையும் மனதில் கொண்டு உருவாகி இருப்பதால், அனைத்து ரசிகர்களும் தம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் விதத்தில் ஒரு ஜனரஞ்சகமான கதைகளமாக அமைந்துள்ளது. நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. என்றார்.