இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அறிமுக போட்டியில் இருந்தே தனது திறமையான பந்துவீச்சின் மூலம் எதிரணிகளை மிரட்டி வருகிறார்.தனது மணிக்கட்டை வித்தியாசமான முறையில் வளைத்து பந்தை தாறுமாறாக பந்தை திருப்பும் சிறப்பு திறன் பெற்றவர்.சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரில் இவரது மாயாஜால சுழலின் உதவியால் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் குல்தீப் யாதவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என அவரது பந்துவீச்சு ஆலோசகரும், ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரருமான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.