Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதாவை நான் சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை

January 13, 2018
in News, Politics, World
0

ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி சிகிச்சை அளிக்க சென்றதாக கூறப்பட்ட சென்னை மருத்துவ கல்லூரி இருதய சிகிச்சை நிபுணர்கள் தினேஷ், சுவாமிநாதன் ஆகியோருக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதில் டாக்டர் தினேஷ் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டார்.

மற்றொரு டாக்டரான சுவாமிநாதன் நேற்று காலை 10 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சுமார் 30 நிமிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த டாக்டர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறும்போது, “விசாரணை ஆணையத்தில் மருத்துவ குறிப்பு தொடர்பான விளக்கம் கேட்டார்கள். அதை சொன்னேன். டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவை நான் நேரடியாக சந்திக்கவும் இல்லை, சிகிச்சை அளிக்கவும் இல்லை, ‘எக்மோ’ கருவி பொருத்தவும் இல்லை. ஆனால் அன்றைய தினம் அப்பல்லோ மருத்துவமனையில் என்னுடன் சேர்ந்து 4 பேர் இருந்தோம். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்கள்” என்றார்.

அவரைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் விசாரணை ஆணையத்துக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த டிசம்பர் 21-ந் தேதி சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதுதொடர்பாக பதில் அளிக்க ஏதுவாக சசிகலா தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தவர்கள் விவரம் வேண்டும் என்று மனு வழங்கினார். இன்னும் சிலர் புதிய சாட்சிகளாக வர இருக்கிறார்கள்.

விசாரணை ஆணையத்தில் சாட்சி அளிப்பவர்கள் முழுவதுமாக முடிந்த பின்னர் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தவர்களின் விவரங்களை கொடுக்க வேண்டும். விவரங்கள் பெறப்பட்ட 16-வது நாளில் எந்த தாமதமும் இன்றி குறுக்கு விசாரணை மற்றும் சசிகலாவின் சாட்சியத்தை அளிக்கிறோம் என்று மனு கொடுத்து வாதிட்டோம்.

நீண்ட வாதத்துக்கு பிறகு, எங்கள் மனுவை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஒத்திவைத்தார். ஆணையத்தின் மீதும், அதன் நிர்வாகத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை 75 நாட்கள் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் அளித்த சிகிச்சை தொடர்பான விவரங்களை 12-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய விசாரணை ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களை 2 பெட்டிகளில் வைத்து கொண்டுவந்தனர். அப்பல்லோ மருத்துவமனையின் வக்கீல் மகிபூனம் பாட்ஷாவும் உடன் வந்தார். அந்த ஆவணங்கள் விசாரணை ஆணைய தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட 30 தொகுப்புகள் அதில் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

ஆவணங்களை சரிபார்க்கும் வரை அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் விசாரணை ஆணையத்தில் இருந்தனர். வக்கீல் மகிபூனம் பாட்ஷா விசாரணை ஆணையத்தில் என்னென்ன ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்ற விவரத்தை ஆணைய தலைவரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்துள்ள இந்த விவரங்கள் பதிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

ஆவணங்களை தாக்கல் செய்ய தாமதம் ஆனதற்கான காரணம் குறித்து அப்பல்லோ ஊழியர்களிடம் கேட்டதற்கு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அசல் விவரங்களை தாக்கல் செய்ய விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. எங்களுக்கு ஒரு நகல் வேண்டும் என்பதற்காக அதை ‘ஸ்கேன்’ எடுக்க தாமதம் ஆனதாக தெரிவித்தனர்.

அப்பல்லோ தாக்கல் செய்த ஆவணங்கள் மருத்துவம் தொடர்பான விவரங்களாக இருப்பதால் அதை ஆய்வு செய்வதற்கு மருத்துவக்குழு ஒன்று இருந்தால் தான் அதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். எனவே மருத்துவ ஆவணங்களை பரிசீலிக்க விசாரணை ஆணையத்தில் மருத்துவக்குழு விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அப்படி மருத்துவக்குழு நியமிக்கப்பட்டால், அக்குழு ஆவணங்களை ஆய்வு செய்து ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைகள் குறித்த விவரங்களை ஆணைய தலைவருக்கு தெரிவிக்கும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நேற்றைய விசாரணை முடிந்ததும் சொந்த ஊருக்கு புறப்பட்டார். வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் விசாரணையை தொடங்க இருக்கிறார்.

22-ந் தேதி டாக்டர் சிவகுமார், 23-ந் தேதி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 24-ந் தேதி பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் முத்துமாணிக்கம், 25-ந் தேதி கைரேகை நிபுணர் டாக்டர் பாலாஜி ஆகியோர் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

Previous Post

ரஷ்யாவின் : டபள் கேம்

Next Post

கூடுதல் செலவினங்களுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு

Next Post

கூடுதல் செலவினங்களுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures