Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூடுதல் செலவினங்களுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு

January 13, 2018
in News, Politics, World
0

தமிழக சட்டசபையில் நேற்று, 2017-2018-ம் ஆண்டு ஏற்பட்ட கூடுதல் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு முதல் துணை மதிப்பீடுகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் ரூ.6,522.03 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி 2017-2018-ம் ஆண்டிற் கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் புது துணைப் பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடுசெய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான ஓய்வுகாலப் பலன்கள், தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் தொடர்பான நிலுவைகள், வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்க வழிவகை செய்ய, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக ரூ.2,519.25 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 8,272 குடியிருப்புகளையும், ஒரு லட்சத்து 57 ஆயிரம் தனி வீடு களையும் கட்டுவதற்காக ரூ.588.12 கோடியை அரசு கூடுதலாக அனுமதித்துள்ளது. மத்திய அரசின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.268.07 கோடியை கூடுதலாக அரசு அனுமதித்துள்ளது. பாக் வளைகுடாப் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, சாதாரணப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அரசு ரூ.286 கோடியை அனுமதித்துள்ளது.

தேசிய வேளாண் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்க, மாநில அரசின் பங்கான ரூ.177.86 கோடியை இந்த அரசு அனுமதித்துள்ளது. 2017-2018-ம் ஆண்டில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வறட்சி நிவாரண நடவடிக்கையாக, சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.120 கோடியை வழங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது. மேலும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு மாற்றம் செய்வதற்கு ரூ.1799.75 கோடி தேவைப் படுகிறது. இவற்றிற்கென இத்துணை மதிப்பீடுகளில் ரூ.1,919.75 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தில் இருந்து ரூ.608 கோடி செலவில் 1,435.96 கிலோ மீட்டர் நீளமுள்ள 460 ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மற்றும் ஊராட்சி சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்துதல் மற்றும் நிலை உயர்த்தும் பணிகளுக்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு வட்டியில்லா வழிவகை முன்பணமாக ரூ.793.81 கோடியை அரசு அனுமதித்துள்ளது. மாநில நெடுஞ்சாலை, முக்கிய மாவட்டச் சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளின் குறித்தகால பராமரிப்புச் செலவினங்களுக்காக அரசு கூடுதலாக ரூ.300 கோடியை அனுமதித்துள்ளது.

புறவழிச்சாலை, வட்டச்சாலை மற்றும் 6 வழிப்பாதைகள் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக அரசு ரூ.594.58 கோடிக்கு திருத்திய நிர்வாக அனுமதி அளித்துள்ளது. அரியலூர் சிமெண்டு அலகின் விரிவாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, டான்செம் நிறுவனத்திற்கு வழிவகை முன்பணமாக ரூ.300 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முன்னதாக, சட்டசபையில் இதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Previous Post

ஜெயலலிதாவை நான் சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை

Next Post

தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி

Next Post

தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures