நடிகை விந்தியா ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் சிலர் அவரை அப்போதே கவர்ச்சி நடிகை என சொல்ல தொடங்கினர்.
பின் படங்களில் ஏதும் நடிக்காத அவர் சில வருடங்களுக்கு முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை கட்சியுடன் இணைத்துக்கொண்டார்.
திரைப்பட நடிகை என்பதால் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த கலைஞரையும், ஸ்டாலினையும் கடுமையாக சாடினார்.
இவரது பேச்சு தீயாய் பறக்க விஷயம் தலைமைக்கு போனது. உடனே ஜெ விந்தியாவை போயசுக்கு அழைத்து கட்டியணைத்து பாராட்டினாராம்.
பின் தலைமை பேச்சாளரான இவர் அடுத்த தேர்தலில் சூறாவளி பிரச்சாரமாய் போகும் இடமெல்லாம் பரபரப்பாக்கினார்.
கடந்த தேர்தல் சமயத்தில் விஜய்காந்தையும் விட்டுவைக்காத இவர் ஜெயலலிதாவின் மறைவால் ஒரு வாரம் அழுதாராம்.
சோகம் தாளாத இவர் ஜெயலலிதாவை அம்மா என்று சொன்ன வாயால் வேறு யாரையும் அம்மா என்று சொல்லமாட்டேன்.
கட்சியை விட்டு விலகி, மறைந்த முதலமைச்சருக்காக புத்தகம் எழுதப்போகிறேன் என்று கிளம்பிவிட்டாராம்.இவரை விசுவாசத்தை கண்டு சிலர் மறைமுகமாக வாழ்த்தி வருகிறார்களாம்.