இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியா சென்றிருந்தனர்.
நேற்றிரவு (31) 10.20 மணிக்கு இந்தியாவின் புதுடில்லியிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 196 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.