அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில், அரச கட்டிடம் ஒன்றில் இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த துப்பாக்கி தாரி ஒரு அரச தொழில் துறை ஊழியர் எனவும், நீண்ட துப்பாக்கிப் பிரயோகங்களின் பின்னர் பாதுகாப்புப் பிரிவினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க நேரப்படி நேற்று (31) வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.