ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடமபெறவுள்ளது.
இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களே இச் சந்திப்பிலும் கலந்த கொள்ளவுள்ளனர்.