ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21) அதிகாலை ஜப்பான் சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொத்தம் 21 பேர் கொண்ட குழுவொன்று இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஜனாதிபதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தில் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் இறுதி வெளிநாட்டு விஜயம் இதுவாக இருப்பது விசேட அம்சமாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.