நாட்டில் இப்போது சுதந்திரமான ஜனநாயக சமூகமொன்று உருவாகியுள்ளதனால், எந்தவொருவருக்கும் அரசியல்வாதிகளிடம் பயமில்லாமல் கேள்வி கேட்க முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் லயன்ஸ் கழக செயற்பாட்டாளர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
யாராவது ஒருவர் கேள்வி கேட்டவுடன் தான் கோபப்படவோ, ஏசவோ மாட்டேன். வெள்ளை வேனில் கடத்திச் செல்லவோ மாட்டேன் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.