இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மனைவியான மீனாட்சியின் மகளான தீ (Dhee) வித்தியாசமான குரல்வளம் கொண்டவர். மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தில் இடம்பெற்ற, “ஏ சண்டக்காரா…’ என்ற பாடலைப் பாடினார்.
அந்தப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து, தனுஷ் நடிப்பிர் யுவன்சங்கர்ராஜா இசையமைத்த ‘மாரி-2’ படத்தில் இடம் பெற்று சூப்பர்டூப்பர் ஹிட்டான ‘ரவுடி பேபி…’ பாடலைப்பாடினார்.
யூடியூபில் மில்லியன் கணக்கில் ரசிக்கப்பட்ட ரவுடி பேபி பாடலைப் பாடிய பிறகு பாடகி தீ (Dhee) யைத்தேடி ஏராளமான வாய்ப்புகள் தேடி வருகின்றன. தற்போது, ஜி.வி.பிரகாஷ் இசையிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் தீ.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்கும் ‘சூரரை போற்று’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்த படத்திற்காகத்தான் தீயை பாடவைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்குமார்.