சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க, கல்லறைக்கு உள்ளே கண்ணீர் வடிப்பார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இன்று இணைந்துள்ளளார்.
இந்நிலையிலேயே முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டரில் இது குறித்து கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில்.”எல்லோரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை நோக்கி ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க, கல்லறைக்கு உள்ளே செய்த பாவங்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.