மத்திய வங்காள விரிகுடா பகுதியில் காணப்படும் தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி காங்கேசன்துறையில் இருந்து ஆயிரத்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது.
இந்த சூறாவளி “கஜா” என பெயரிடப்பட்டுள்ள இச் சூறாவளி எதிர்வரும் 24 மணித்தியாலங்களுள் மேற்கில் வலுவடைந்து வடமேல் திசையில் பயணிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.