சிவகார்த்திகேயன் தயாரித்த ‛கனா’ படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மீண்டும் அவரின், ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் தங்கையாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், மிகச் சிறிய வயதிலேயே என்னை இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வைத்தனர். ரொம்பவும் பதட்டத்தோடுதான் நடித்தேன். இருந்தாலும், படம் வெற்றி என்றதும், அதுவே எனக்கு நல் வாய்ப்பாக அமைந்து, வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது.
அதேபோல, இப்போது, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு என்னை தங்கையாக நடிக்க வைத்து விட்டனர். அதனால், பெரிய வருத்தம் எதுவும் இல்லை. என்றாலும், இனிமேல் அவரோடு ஜோடியாக நடித்து தான், அக்கா-தங்கை நடிகை என்னும் இமேஜை மாற்ற வேண்டும். இனி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகத்தான் நடிப்பது என முடிவெடுத்திருக்கிறேன் என்கிறார்.