டுபாயில் கைது செய்யப்பட்டு மத்திய பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மதூஷ் குழுவை கண்காணிப்பதற்கு “டிடேன் இன் டுபாய்” முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் கைது செய்பவர்களை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு அமைப்பாக டிடேன் இன் டுபாய் அமைப்பு செயற்படுகின்றது.
போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்படுபவர்கள் குறித்து டுபாய் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் திருப்திகரமாக இடம்பெறுவதில்லையெனவும், இதனால், குற்றம் செய்யாதவர்களும் சிறைப்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படுவதாகவும் டிடேன் இன் டுபாய் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கையர்களின் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் வழக்கொன்று தொடர்பில் விசாரணை மேற்கொள்ள டுபாய் பொலிஸாருக்கு 6 மாதத்துக்கு குறையாத காலம் தேவைப்படுவதாக டிடேன் அமைப்பு கூறியுள்ளது.
அரபு மொழியில் எழுதப்படும் வாக்குமூலம், சாட்சிகள் என்பவற்றுக்கு பலவந்தமாக கையொப்பம் பெற்றுக் கொள்வதாகவும் டுபாய் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் டிடேன் இன் டுபாய் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.