அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில் இணையுமாறும் அமைச்சர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாம் உங்களுக்கு இந்த கடனை பெற்றுக்கொடுக்க விசேட வசதிகளை வழங்கும்படி குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆனால் எந்தவொரு வங்கியாவது அவ்வாறு சலுகையை வழங்காவிட்டால் 1925 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு எமக்கு அறியத் தாருங்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்ற வரட்சியால் பாதிப்படைந்த மாவட்டங்களில் 45000 பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடனையும் அதற்கான வட்டியையும் இரத்து செய்யும் சான்றிதழ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.