பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இவர் தற்போது சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆனால் நடிகையாக அல்ல, பின்னணி பாடகியாக.
கன்னடத்தில் பராகூர் ராமச்சந்திரப்பா என்பவர் இயக்கும் பேயலதாதா பீமண்ணா என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் ரூபா. இந்துஸ்தானி, கர்நாடக இசையை முறைப்படி பயின்ற இவர், ஒரு டிவி நிகழ்ச்சியில் தான் பாடியதை கேட்டு, சினிமாவில் பாட அழைத்ததாக தெரிவித்துள்ள ஐபிஎஸ் அதிகாரி ரூபா, இந்த படத்தில் டூயட் பாடலாக இல்லாமல் வேறொரு சூழலுக்கு அமைந்த பாடலை பாடியிருப்பது மகிழ்ச்சி என்றும், எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், ஆஷாபோஸ்லே, லதா மங்கேஷ்கர், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் எனக்கு பிடித்தமான பாடகிகள் என்றும் தெரிவித்துள்ளார்.