சமீபகாலமாக சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து வரும் கலாச்சாரம் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து நடிகைகளை பாது காக்க திரையுலகினர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து நடிகை சமந்தா கூறுகையில், திரையுலகில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இருக்கிறது. அதேசமயம் சினிமாவை எடுத்துக்கொண்டால் இங்கே நல்லவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனபோதும் ஓரிரு கறுப்பு ஆடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களால்தான் இதுபோன்று பாலியல் டார்ச்சர் நடந்து வருகிறது. இந்த மாதிரி நபர்களை களையெடுத்து விட்டால் சினிமா அற்புதமான உலகமாகி விடும் என்று கூறுகிறார் சமந்தா.