பிரான்சின் முன்னணி நகைச்சுவை நடிகரான Dieudonné, சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் மகிழுந்து செலுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய நகைச்சுவையாளர் Dieudonné நேற்று வெள்ளிக்கிழமை Châtillon (Hauts-de-Seine) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாதாரண சோதனைகள் மேற்கொள்ளுவதற்காக காவல்துறையினர் அவரின் மகிழுந்தை நிறுத்தினார்கள். விசாராணைகளின் பின்னர் அவர் சாரதி அனுமதி பத்திரம் இல்லாத காரணத்தினால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, முறையற்று மகிழுந்தை செலுத்திய குற்றத்துக்காக அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது சாரதி அனுமதி பத்திரத்தை இழந்திருந்தார்.
இதே போன்றதொரு வழக்கில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு €1,500 க்கள் தண்டப்பணம் செலுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கைதான அவர், இன்று சனிக்கிழமை நண்பகலில் நிபந்தைனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.