ராம் இயக்கி, நடித்த தங்கமீன்கள் படத்தில் அவரின் மகளாக செல்லம்மாவாக நடித்தவர் சாதனா. தற்போது, மீண்டும் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் பேரன்பு படத்தில் பாப்பா என்ற கேரக்டரில் மாற்றுதிறனாளியாக நடிக்கிறார்.
நடிப்பு, படிப்போடு மட்டுமல்லாது சமூக மேம்பாட்டுக்கான பணிகளிலும் சாதனா ஈடுபட்டு வருகிறார். துபாயில் வசித்து வரும் சாதனா, அங்குள்ள மாற்று திறனான குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஸ்பீச் தெரப்பி, நடனம் போன்ற கலைகளை கற்று கொடுத்து, அவர்களின் குறைகளை நிறைகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வரகிறார். இவரின் சேவையை பாராட்டும் வகையில் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான “டயானா விருது” இவருக்கு கிடைத்திருக்கிறது.
இதையடுத்து சாதனாவிற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிய தொடங்கி உள்ளன.