சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 சீனர்கள் காலி பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒருவருக்கு தலா ஒரு வருடம் வீதம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணமும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து காலி தடல்ல பிரதேசத்தில் கட்டிட நிர்மாணப் பணியில் கூலி வேலையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.