ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 70 இற்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் அந்தப் பிரேரணைகள் எந்தவொன்றையும் ஒரு சதத்துக்கும் கருத்தில் கொள்ளவில்லை.
இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பிரேரணை குறித்து தூக்கிப் பிடிக்கத் தேவையில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்று ழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.