ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும், உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் பகிரங்க கருத்து மோதல்களை நேரடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவருமாறு அக்கட்சியின் பின்னாசன உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலரிமாளிகையில் நேற்று பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த எம்.பி.க்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள இருவரும் பகிரங்கமாக மோதிக் கொள்வது கட்சியின் ஒற்றுமைக்கு தவறான ஒரு முன்மாதிரியாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சியின் பின்னாசன எம்.பி.க்களது கருத்துக்களை மிகுந்த அவதானத்துடன் கேட்ட பிரதமர், அடுத்த வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.