ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ஆதரவு வழங்குமாறு எம்மிடம் கேட்டுக் கொண்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் பக்ஸ் மூலமும், எழுத்து மூலமும் இந்த வேண்டுகோளை விடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.