ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்னும் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் ஐந்தாவது நாளாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இருப்பினும், இன்று காலையில் காரியாலய ரயில்கள் 10 மாத்திரம் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சாதாரணமாக ஒரு நாளைக்கு காலை வேளையில் பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை 30 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் இன்று மாலை தீர்வொன்றைப் பெற்றுத்தறாது போனால், போராட்டம் தொடரும் எனவும் அச்சங்கங்கள் கூறியுள்ளன.