ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது கட்சி உறுப்பினர்களின் எல்பிட்டிய தொகுதிக் கூட்டம் இன்று (29) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில், அமைச்சர்களான சஜித் பிரேமதாசவும், கயந்த கருணாதிலக்கவும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் களம் சூடேற்றப்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.