கோஹ்லி செய்த மிகப் பெரிய தவறு: கைமேல் பலனடைந்த இங்கிலாந்து அணி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மொயீன் அலி சதம் கடந்து 120 ஓட்டங்களுடன் களத்தில் ஆடிவருகிறார்.
இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தலைவரான கோஹ்லி செய்த தவறால் இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்கள் இலவசமாக கிடைத்துள்ளது.
ஆட்டத்தின் 25 வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய பந்தை, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தடுத்து ஆட முயற்சி செய்த போது, அது இன்சைடு எட்ஜ் ஆகி கீப்பருக்கு பின் திசையில் சென்று விட்டது.
முதல் சிலிப்பில் நின்று கொண்டிருந்த கோஹ்லி இதைக் கண்டு உடனடியாக அந்த பந்தை நான்கு ஓட்டங்கள் செல்லக் கூடாது என்பதற்காக விரட்டிப் பிடித்தார்.
பிடித்தவுடனே பந்தை கீப்பரை நோக்கி வீசும் போது, எதிர்பாரதவிதாமாக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மட் மீது பட்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.