கருப்பு பட்டி அணிந்து களத்தில் கிரிக்கட் வீரர்கள்! எதற்காக தெரியுமா?
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கட் அணி மோது ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா-இங்கிலாந்து வீரர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் இன்றைய போட்டியில் வீரர்கள் அனைவரும் கருப்பு பட்டி அணிந்து விளையாடுகின்றனர்.
இதனிடையில் கமெண்டரியில் இருந்தவர்கள் பேசும் போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறப்பு மற்றும் இறப்பு திகதியை குறிப்பிட்டு, அவருக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கை பற்றியும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.