பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அஜித் பீ.பெரேரா,பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய களமிறங்கும் போது அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரே நபர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே எனவும் கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாஸவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.