கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக வரப்போகின்றார் என்ற தகவல்கள் வெளியானது முதல் தேர்தலை ஒத்திவைப்பதற்கான தந்திரங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் அமைப்பதக்காக மீண்டும் எடுக்கப்படும் முயற்சியும் இந்த வகையிலான ஒரு தந்திரோபாயமே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும் தேசிய அரசாங்க யோசனைக்கு உடன்பட மாட்டார். ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள அமைச்சுப் பதவிகள் மீது பேராசை பித்த ஒரு சிலரினாலேயே இந்த தேசிய அரசாங்க யோசனையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
20 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதித் தேர்தலை நடாத்தாமல் விடுவது இந்த தேசிய அரசாங்கத்தின் உள்நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று (27) எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.