போதை பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட கஞ்சிப்பான இம்ரானை இலங்கை விசாரணை பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
கஞ்சிப்பான இம்ரான் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பொறுப்பேற்றக்கப்பட்டுள்ளார்.
டுபாயில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட கஞ்சிப்பான இம்ரான் நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு, போதை பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டு ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர் நேற்றையதினம் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோரிடம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் லலித் குமார சி சி டி எனப்படும் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.