ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து இன்று (28) வடக்கில் மூன்று பிரதான பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணம், வவுனியா, கந்தளாய் ஆகிய பிரதேசங்களிலேயே இந்தக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இதில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.