இன்றைய தினம் ஐந்து தமிழ் கட்சிகளிற்கும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஐந்து பொது இணக்கப்பாட்டிற்கு வந்து, ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க 13 அம்ச கோரிக்கைகள் தயாரிரிகபடிருந்தன.
இரண்டு பிரதான கட்சிகளும் கோரிகைகளை நிராகரித்துள்ள நிலையில், பொது ஆவண விவகாரம் அசைவற்று நிற்கிறது.
இந்தநிலையில், இது குறித்து ஆராய எதிர்வரும் 30ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளும் தீர்மானித்திருந்தன.
அத்துடன் 3 கட்கிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
5 கட்சிகளிற்குள் உள்ள ஏட்டிக்குப் போட்டியால், இன்று 28 ஆம் திகதி அவசரகதியில் சந்திப்பிற்கு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் பல்கலைகழக மாணவர்கள் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய, சம்பிரதாயமான சந்திப்பாக இது அமையும் எனவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் ,ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் விக்னேஸ்வரன், அருந்தவபாலன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசாவும், மற்றும் புளொட் தரப்பில் என்.சிறிகாந்தாவும் கலந்து கொள்ளவுள்ளதாகவும்தெரியவருகின்றது.