நாட்டை முன்னேற்றுவதற்கான புரட்சியை ஏற்படுத்த சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை சுயதொழில் முயற்சியாளர்கள், வீதியோர வியாபாரிகள் ஆகியோருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி வீதியோர வியாபாரிகளை கோட்டாபய துரத்தினார். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை விரும்புகிறீர்களா?
2018 ஆகும் போது கடன் சுமையை மட்டுப்படுத்த இருந்த போதும் 52 நாள் நிகழ்ந்த ஆட்சி சதி, அதன்பின்னரான உயிர்த்தஞாயிறு தாக்குதல் என்பவற்றால் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.