கொழும்பு – தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடுவலை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியாவ, இரத்மலானை, சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.