பப்புவா நியூ கினியாவிலுள்ள மனுஸ் ரகசிய தடுப்பு மையத்திலிருந்து வெளியேற மறுத்து வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனை கென்பரா அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
பொலிஸ் நடவடிக்கையை தொடர்ந்து சுமார் 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பேருந்து மூலம் மாற்று முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் வெளியேற்றமானது, அமைதியான முறையிலும், படையினரின் பயன்பாடு இன்றியும் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஆணையாளர் காரி பாக்கி தெரிவித்தார்.
ஆனால், பொலிஸாரினால் தாக்கப்பட்டே மனுஸ் முகாமிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதாக, புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
பப்புவா நியூ கினியாவிலுள்ள மனுஸ் ரகசிய தடுப்பு முகாமானது கடந்த ஒக்டோபர் மாதம் மூடப்பட்டது. ஆனால், அங்கிருந்த சுமார் 300இற்கும் அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.