கொலம்பியா நாட்டில் பாரம்பரியமிக்க மலர் கண்காட்சி திருவிழா துவங்கியுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள மெடலின் நகரில், ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலர் கண்காட்சி மிகவும் உற்சாகமாக துவங்கியுள்ளது. விதவிதமான வண்ண மலர்கள் காட்சி அணிவகுப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பல அரிய வகை மலர்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மெடலின் நகரில் குவிந்த ஏராளமான பார்வையாளர்கள், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு மலர் படைப்புகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு கண்டுகளித்தனர்.
1957ஆம் ஆண்டு உள்ளூர் மலர் வியாபாரிகள் தங்களது மலர் படைப்புகளைக் காட்சிப்படுத்தி வரவேற்பு பெற்றதையடுத்து, அங்கு மலர் கண்காட்சியானது தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.