Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இன்று கையளிப்பு! ஜனாதிபதி உத்தரவு

March 1, 2017
in News
0
கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இன்று கையளிப்பு! ஜனாதிபதி உத்தரவு

கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இன்று கையளிப்பு! ஜனாதிபதி உத்தரவு

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதி மக்களின் காணிகள் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு கையளிக்கப்படவுள்ளன.

மக்களின் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய உத்தரவையடுத்து நேற்றைய தினம் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விமானப்படையினர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி அதிகாரிகள் இணைந்து மக்களின் காணிகளை அடையாளப்படுத்தியிருந்தனர்.

இன்றைய தினம் 11 மணிக்கு காணிகள் மக்களிடம் கையளிக்கப்படுமென கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி. குணபாலன் தெரிவித்தார். இதற்கு ஏதுவாகவே காணிகள் அளவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்பிக்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர்.

மக்களின் காணிகளை ஓரிரு தினங்களில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், முப்படையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

மக்கள் விரும்பினால் தமது பழைய இடங்களில் சென்று குடியமர முடியும். இல்லாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுக் காணிகளில் தொடர்ந்தும் வசிக்க முடியும்.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் கரைத்துறைபற்று பிரதேச செயலக காணி அதிகாரிகள் நேற்று குறித்த காணிகளுக்குச் சென்று அளவிடும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இன்று முற்பகல் 11 மணிக்கு காணிகள் வழங்கப்படுமென பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

விமானப் படையினரிடமுள்ள மக்களின் சொந்த காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக வழங்கப்பட்ட மாதிரிக் கிராமம் அரசாங்கத்தினால் மீளப்பெறப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை வழங்குமாறு கோரி விமானப்படை முகாமுக்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என பலரும் குளிர், வெயில் என மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாது கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குள் அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே போராட்டத்தைக் கைவிடுவார்கள்.

எனவே போராட்டத்தை முடித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தனர்.

எதிர்வரும் நான்காம் திகதி தான் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதால் அதற்கு முன்னர் இந்த மக்களின் காணிப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வந்து விடுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கும், படையினருக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று (01) காணிகள் விடுவிக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த இரு துருக்கியர்கள் கைது!

Next Post

இலங்கைக்கு எச்சரிக்கை! நேர்மையற்ற விதத்தில் நடந்தால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்!

Next Post
இலங்கைக்கு எச்சரிக்கை! நேர்மையற்ற விதத்தில் நடந்தால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்!

இலங்கைக்கு எச்சரிக்கை! நேர்மையற்ற விதத்தில் நடந்தால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures