முல்லைத்தீவு நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்க தேரரின் இறுதிக் கிரியை சம்பவம் தொடர்பான விடயங்கள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட ஏற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இறுதிக் கிரியை நடைபெறும் நிகழ்வில் அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவற்றின் பிரதிநிதிகள் காணப்பட்டதாகவும் அவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜெனீவாவுக்கு அனுப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் இன்றைய தேசிய சகோதர நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இறுதிக் கிரியை நடைபெறும் நிகழ்வுக்கு தமிழ் சட்டத்தரணிகள் மூவர் சமூகமளித்திருந்ததாகவும் அவர்களில் ஒருவருக்கு பிக்குகள் குழுவொன்று தாக்குதல் நடாத்தியதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.