Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை

February 4, 2018
in News, Politics, World
0

வடக்கு – கிழக்கு இணைப்பை மேற்கொள்வதற்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. வடக்கு – கிழக்கைப் பலவந்தமாக இணைக்க முடியாது. என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி – சமகாலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளுக்கமைய புதிய அரசமைப்பைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையுள்ளதா?

பதில் – நாங்கள் முயற்சிக்கின்றோம். பார்ப்போம் யார் எதிர்க்கின்றார்கள் என்று. மக்களுக்குத் தெரியும் யார் அதை எதிர்க்கின்றனர் என்று.

கேள்வி – கூட்டு அரசின் முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மக்களிடம் கடும் அழுத்தத்துக்குள்ளாகி வருகிறாரே?

பதில் – அவருக்கும் பிரச்சினையுள்ளது. எமக்கும் பிரச்சினையுள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டுதான் இந்தப் பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் ஒன்றிணைந்தாலும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லை.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள இணைந்த வடக்கு – கிழக்கில் கூட்டாட்சி சாத்தியமாகுமா?

பதில் – அவர்கள் கூட்டாட்சிக்குச் சமமான முறைமையொன்றையே வலியுறுத்துகின்றனர். நாங்கள் கூறுகின்றோம். ஒற்றையாட்சி கோட்பாட்டுக்கு பாதகம் ஏற்படாத வகையிலான தீர்வையே. இதில் பொதுவான காரணிகள் பல உள்ளன. எங்களுடைய நிலைப்பாடு ஒற்றையாட்சி கட்டமைப்பில் தீர்வு காண்பதாகும்.

ஒற்றையாட்சிக்குப் பாதகம் ஏற்படாத வகையில் அதிகாரப்பகிர்வை மேற்கொண்டால் பிரச்சினையில்லாது தேசியக் கொள்கைகளை வகுத்து வேலைகளைச் செய்ய முடியும். தேர்தலின் பின்னர் இது தொடர்பில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பிக்கப்படும்.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிக்கும் வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா?

பதில் – அதனைச் செய்ய கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக இல்லையே. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியாது. கிழக்கில் பெரும்பான்மையில்லை. பலவந்தமாக இணைக்க முடியாது.

கேள்வி – முஸ்லிம் மக்கள் இணங்கினால் இணைக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா?

பதில் – அதனைப் பார்க்கலாம். தற்போது பெரும்பான்மையில்லை.

Previous Post

மோதல் அற்ற தேர்தலுக்கு முன் நிற்போம்!

Next Post

இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

Next Post
இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures