கிரீஸ் நாட்டின் எவியா தீவில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இரவு முழுவதும் போராடினர்.
எவியா தீவில் செவ்வாய் அன்று திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயானது, காற்றின் வேகத்தாலும், வெப்பமான சூழலாலும் கட்டுக்கடங்காமல் பரவி, இயற்கை காப்பிடம் என அறிவிக்கப்பட்ட பைன் மரக்காடுகளை நாசமாக்கி வருகிறது. இரவு முழுவதும் போராடிய தீயணைப்பு வீரர்கள ரசாயனப் பொடி தூவியும், நீரை ஊற்றியும் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்களின் வீரச் செயலுக்கு எவியா மேயர் பாராட்டு தெரிவித்தார்.இத்தாலியில் இருந்து தீயணைப்பு விமானங்கள் வரவழைக்கப்படவுள்ளன. புதனன்று காலை தீ ஒருவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
இருந்தபோதும் முன்னெச்சரிக்கை காரணமாக வனத்தை ஒட்டிய கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வறட்சியான சூழலால் வெப்பம் அதிகமுள்ள மாதங்களில் கிரீஸில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஜூலையில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சில மணி நேரங்களில் 102 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.