கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இன்று (28) பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, அந்த நோயாளர்களுக்கு பிரித் நூல் கட்டி ஆசீர்வாதம் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரரும் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.