மஹாசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
எனினும் சந்தேகநபர் இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாகவும் சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சந்தேகநபரை நளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.