கனடாவில் கடுமையான குளிர்காலநிலை நிலவும் அபாயம்
கனடாவின் பெரும்பாகத்தை கடுமையான குளிர் காலநிலை தாக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் மேற்கு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாகவும், கிழக்கில் கடந்த ஒரு வாரமாகவும் தொடர்ந்த துருவ சுழல் தாக்கம், கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தில் நிலைமாறும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்பேர்ட்டா, சஸ்கற்சுவான், மனிடோபா மற்றும் நியு பிறவுன்ஸ்விக் ஆகிய மாகாணங்களிற்கு அதிதீவிர குளிர் காலநிலையை கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது.
சதுப்பு நிலங்களில் காற்றுடன் கூடிய குளிரானது தசையை ஐந்து அல்லது 10 நிமிடங்களில் உறைய வைத்து விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பத்து வருடங்களில் மிகவும் குளிரான காலநிலை நியு பிறவுன்ஸ்விக்கை இம்முறை தாக்கியுள்ளது. காற்றுடன் கூடிய குளிர் வெப்பநிலை -30ற்கு இந்த வார இறுதி நாட்களில் காணப்படும்.
இதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகள். கியுபெக் மற்றும் ஒன்ராறியோவின் வடபகுதிகளிற்கு அதிதீவிர குளிர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் ஒன்ராறியோவின் தென்பகுதியில் 15-20 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு ஏற்படும்.
ரொறொன்ரோ பகுதிகளில் ஐந்திற்கும் 10 சென்ரிமீற்றர்களிற்கும் இடைப்பட்ட அளவிலான பனி பெய்யும் எனவும் பனி உறைபனி மழையாக மாறலாம் எனவும் வெப்பநிலை உறையும் தன்மைக்கு மேல் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.